ஆகஸ்ட் 30

அனைத்துலக காணாமற்போனோர் நாள் (The International Day of the Disappeared)


அனைத்துலக காணாமற்போனோர் நாள் ஆகஸ்ட் 30 ஆம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ ஏதேனும் காரணங்களுக்காக கைது செய்யப்படுவதால் காணாமல் போனவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared - FEDEFAM) கொஸ்டாரிக்காவில் 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகள், இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன. "அனைத்துலக காணாமற்போனோர் நாள்" இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.

No comments:

Post a Comment