திருவருட்பிரகாச
வள்ளலார் என்னும் சிறப்புப்பெயர் பெற்ற
இராமலிங்க அடிகளார் அவர்கள் பிறந்த ஊர்
கடலூர் மாவட்டம் மருதூர். இவரின் பெற்றோர் இராமையா - சின்னம்மையார். இவரின் காலம் 05/10/1823 முதல் 30/01/1874 வரை.
ஜீவகாருண்யஒழுக்கம்,
மனுமுறை கண்டவாசகம் ஆகியன இவர் எழுதிய
நூல்கள் ஆகும். இவரின் பாடல்கள்
அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
சமரச சன்மார்க்க நெறியை வழங்கி, அனைத்து
மதங்களின் நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை அமைத்தவர். வாடியப்பயிரை கண்டபோதெல்லாம்
வாடியவர்;
மக்களின் பசித்துயர் போக்கி உணவளிக்க அறச்சாலையையும்
அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர்.
பசியால்
வாடும் மக்களுக்கு உணவளிக்க வடலூர் சத்திய தருமசாலையில்
இவர் அன்று மூடிய அடுப்பு
இன்றும் அணையாமல் பசி என்னும் நோயைத்
தீர்த்து வருகிறது.
No comments:
Post a Comment