இந்திய உணவுமுறையில் தவிர்க்கமுடியாத இடம் பெற்றிருக்கும் தக்காளி, ஆரம்பகாலத்தில் அலங்காரச் செடியாக வளர்க்கப்பட்ட ஒன்று. பின்னர் தக்காளியின் பயனை அறிந்து மனிதர்கள் உணவில் சேர்த்துக்கொண்டார்.
தக்காளியில் ஆண்ட்டி -ஆக்ஸிடன்டுகள், வைட்டமின் A, வைட்டமின் C, குளோரின், பொட்டாசியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், பைபர் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியன உள்ளன. இதனால் நாம் அடையும் நன்மைகள் ஏராளம்.
தக்காளியை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுவதால்
- சீரான இதயத்துடிப்பு
- இன்சுலின் மற்றும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்தல்
- தைராய்டு சுரப்பியை சீராக்குதல்
- இரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்தல்
- தோல் சம்பந்தமான வியாதிகளிலிருந்து காத்தல்
- சரும புற்றுநோயிலிருந்து காத்தல்
- உணவு செரிமானங்களை சீராக்குதல்
- சிறுநீரகம் தொடர்பான நோய்களிலிருந்து காத்தல்
- எலும்புகளை உறுதிப்படுத்துதல்
ஆகிய நன்மைகளை நாம் அடைய முடியும்.
எவ்வளவு ஆச்சர்யம்..! எத்தனை பயன்கள்.. ! இனி தினசரி உணவில் கட்டாயம் தக்காளியை சேர்த்துப் பயன் பெறுவோம்..
நன்றி..!
No comments:
Post a Comment